மாவட்ட செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகள் இனப்படுகொலைக்கு நிகரானது: அலகாபாத் உயர் நீதிமன்றம்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகள் இனப்படுகொலைக்கு நிகரானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

தினத்தந்தி

அலகாபாத்,

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சம் தொட்டுள்ளது. தினசரி பாதிப்புகள் கடந்த சில நாட்கள் முன்னதாக அதிகபட்சமாக 4 லட்சம் வரை பதிவானது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படுவது கடும் வேதனை அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ஆக்ஸிஜன் இன்றி மக்கள் உயிரிழக்கும் சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் கருத்து தெரிவித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் 'இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழக்கும் சம்பவம் ஒரு இனப்படுகொலைக்கு நிகரானது என கடுமையாக கூறியது.

மேலும், மருத்துவ வசதிகள் மேம்பட்டுள்ள இந்த காலத்தில் ஒரு மனிதனுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டல் உயிரிழப்பு ஏற்படுவதை எப்படி அனுமதிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்