மாவட்ட செய்திகள்

புத்தாடைகள், பட்டாசுகளை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், பட்டாசுகளை வாங்க விழுப்புரம் நகரில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம்,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் முன்கூட்டியே தயாராகி விட்டனர். அதற்கேற்ப புத்தாடைகள் வாங்குவதற்காக ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் விழுப்புரம் நகரில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள் நிறைந்த விழுப்புரம் நேருஜி சாலை, எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி, கே.கே.சாலை, திரு.வி.க. சாலை, திருச்சி மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று தீபாவளியை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

கடைவீதிகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வெளியே வரும் பொதுமக்களால் விழுப்புரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்படுகிறது.

இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கூடுதலாக போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் சீரான வேகத்தில் சென்று வருவதை காண முடிகிறது.

தீவிர கண்காணிப்பு

மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்ட நேரிடும் என்பதால் நகை பறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் முற்றிலும் தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் கூட்டத்தை கண்காணிக்கும் வகையிலும் விழுப்புரம் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளான விழுப்புரம் வீரவாழியம்மன் கோவில், பழைய பஸ் நிலையம், காமராஜர் சாலை, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார், கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து அதிலிருந்தபடியே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி போக்குவரத்தையும் சரிசெய்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்