மாவட்ட செய்திகள்

ஜோலார்பேட்டை, ஏலகிரி மலையில் கூரை வீடுகள், வாழை மரங்கள் சேதம்

ஜோலார்பேட்டை, ஏலகிரி மலையில் மழைகாரணமாக கூரை வீடுகள், வாழை மரங்கள் சேதம் அடைந்தன.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலையோரம் இருந்த கடையின் மேற்கூரைகள், பெயர்ப்பலகைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தது. மேலும் சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் ஜோலார்பேட்டை பகுதியில் மின்சாரம் தடைபட்டது.

ஏலகிரிமலை அத்தனாவூர், தாயலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பம் மீது விழுந்ததில் மின் கம்பம் உடைந்து விழுந்தது. இது குறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை மின்வாரிய ஊழியர்கள் சென்று மின் கம்பங்கள் சரி செய்தனர். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மின் தடை ஏற்பட்டு, நேற்று காலை 10 மணிக்குதான் மீண்டும் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. கூரை வீட்டின் ஓலைகள் காற்றில் பறந்தன.

விவசாய நிலத்தில் உள்ள வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்