மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜெமினி கே.ராமச்சந்திரன் மரணம் - முதல்-அமைச்சர் இரங்கல்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜெமினி கே.ராமச்சந்திரன் மரணத்திற்கு அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி இரங்கள் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஆரணி,

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவரும், தலைமை கழக பேச்சாளரும், ஆரணி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெமினி கே.ராமச்சந்திரன் சில நாட்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். நேற்று பகல் 3 மணியளவில் ஆரணி - ஆரணிப்பாளையம், சாந்தா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.

அவரது மறைவுக்கு அ.தி.மு.க. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெமினி கே.ராமச்சந்திரனை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர்.

ஜெமினி கே.ராமச்சந்திரனின் மனைவி ஜானகி அம்மாள் கடந்த ஜனவரி மாதம் மரணமடைந்தார். இவர்களுக்கு 4 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு