விஜயாப்புரா:
விஜயாப்புரா மாவட்டம் பசவன பாகேவாடி அருகே மசபி நாலா கிராமத்தை சேர்ந்தவர் தசரத மாக்கேரி (வயது 54). இவரது தாய் லலிதாபாய் (79). உத்தரகன்னடா மாவட்டம் சிர்சியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக தசரத மாக்கேரி பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லலிதாபாயுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருடன் தசரத மாக்கேரியும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தா. இந்த நிலையில், 2 பேருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்காக அதே அரசு ஆஸ்பத்திரியில் தாய், மகனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முதலில் லலிதா பாயும், அடுத்த சில மணிநேரத்தில் தசரத மாக்கேரியும் பரிதாபமாக இறந்து விட்டனர். கொரோனாவுக்கு தாய், மகன் பலியான சம்பவம் மசபி நாலா கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.