பெயிண்டர் சாவு 
மாவட்ட செய்திகள்

பெயிண்டர் சாவு

பெயிண்டர் சாவு

தினத்தந்தி

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு வீராசாமி நகரை சேர்ந்தவர் வீரேஸ் (வயது 35). கூலித்தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் மோத்தே பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மேட்டுப்பாளையம் காந்திபுரத்தை சேர்ந்த பெயிண்டர் நயிம் (31) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். எதிர்பாராமல் இருவரது வாகனங்களும் மோதிக்கொண்டன.

இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். 2 பேரையும் அக்கம்,பக்கம் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் நயிம் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

----

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை