மாவட்ட செய்திகள்

பழமையான கட்டிடம் இடித்து அகற்றம்

உத்தமபாளையத்தில் பழமையான கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

தினத்தந்தி

உத்தமபாளையம்:

உத்தமபாளையம் பேரூராட்சி 11-வது வார்டு உட்பட்ட யோக நரசிங்கப் பெருமாள் கோவில் சந்தில் தனியாருக்கு சொந்தமான பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதனை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ. கவுசல்யாவிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

அதன்பேரில் ஆர்.டி.ஓ. நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் பழமையான தனியார் கட்டிடத்தை இடித்து அகற்றுவதற்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் கருப்பையா ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் பாக்லைன் எந்திரத்தின் மூலம் பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றினர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்