மாவட்ட செய்திகள்

ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட ஜவுளி கடைக்கு ‘சீல்’ வைப்பு

சங்கராபுரம் அருகே ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட ஜவுளி கடைக்கு ‘சீல்’ வைப்பு.

தினத்தந்தி

சங்கராபுரம்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர, மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பால், மருந்து, மளிகை, காய்கறி கடைகளை தவிர, மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று ஜவுளிக்கடை ஒன்று திறக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அறிந்த தனி தாசில்தார் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் குளத்தூருக்கு விரைந்து சென்று, ஊரடங்கை மீறி திறக்கப்பட்டிருந்த ஜவுளிக்கடையை பூட்டி சீல் வைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து