மாவட்ட செய்திகள்

ஊத்துக்கோட்டையில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

தமிழக அரசு பிறப்பித்த 14 நாள் முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

தினத்தந்தி

இதையடுத்து ஊத்துக்கோட்டையில் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, மளிகை, பால் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டன.அதன் பிறகு அந்த கடைகளும் மூடப்பட்டன. முழு ஊரடங்கின் போது ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி அண்ணாசிலை நான்கு சாலை சந்திப்பு உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி கோவிந்தராஜ், சிட்டிபாபு ஆகியோரின் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முககவசம் அணியாமல் தேவையின்றி ஊர் சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை