மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை திருமணம் செய்த மில் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை திருமணம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் மில் தொழிலாளியை மேட்டூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

மேட்டூர்,

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 24). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

அதே மில்லில் சேலம் மாவட்டம் கொளத்தூர் கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியும் வேலை செய்து வந்தார். அந்த சிறுமியை கடந்த இரு நாட்களாக காணவில்லை.

இதனிடையே குணசேகரன், கோவிந்தபாடி பகுதியில் உள்ள அந்த சிறுமியின் வீட்டுக்கு சிறுமியை அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.

அப்போது அவர் அந்த சிறுமியை தான் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக மேட்டூர் அனைத்து மகளிர் போலீசில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டதாக கூறி, போக்சோ சட்டத்தின் கீழ் குணசேகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்