மாவட்ட செய்திகள்

பாலாற்றங்கரையில் நிலாச்சோறு சாப்பிட்ட பக்தர்கள்

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் நடவாவி திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் பாலாற்றங்கரையில் நிலாச்சோறு சாப்பிட்டனர்.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

சித்ரா பவுர்ணமியையொட்டி பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் நடவாவி திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காஞ்சீபுரம் பாலாற்றங்கரையில் எழுந்தருளினார். அப்போது அர்ச்சகர்கள் கற்பூர தீபாராதனை காட்ட, பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் வரதராஜபெருமாளையும், ஸ்ரீதேவி பூதேவியையும் பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் பாலாற்றங்கரையில் நிலாச்சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர். பின்னர் வரதராஜபெருமாள் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் செவிலிமேடு விளக்கடிகோவில் தெரு, டி.கே.நம்பி தெரு வழியாக கோவிலை வந்தடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான விஜயன் மற்றும் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து இருந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது