மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி பேரவை கூட்டம்

திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி பேரவை கூட்டம் நாகல்நகர் வங்கி கிளையில் நடைபெற்றது.

தினத்தந்தி

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கியின் 111 மற்றும் 112-வது பொது பேரவை கூட்டம், நாகல்நகர் வங்கி கிளையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர கூட்டுறவு வங்கி தலைவர் எம்.வீரமார்பன் தலைமை தாங்கி பேசினார். வங்கி மேலாண்மை இயக்குனர் மதி முன்னிலை வகித்தார்.

வங்கி உறுப்பினர்களுக்கு வீட்டு அடமான கடன் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்துவது, ஏ.டி.எம். மையங்களை ஏற்படுத்தி உறுப்பினர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்குவது, வங்கியின் எல்லையை விரிவாக்கம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் வெள்ளை கோபால், சீனிவாசன், ராமலிங்கம், கிருஷ்ணவேணி, முருகேசன், முருகேஸ்வரி, ஜெயினம்மாள், பொதுப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்