மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கூட்டம் கூடுவதை தவிர்க்க கோவில்களும் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபெற இருந்த பங்குனி உத்திர பெருவிழாவும் கோவில் நிர்வாகம் சார்பில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கோவில் மூடப்பட்டாலும் ஆகமப்படி நித்திய பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் கோவிலுக்குள் நுழையும்போது முகக்கவசம் அணிந்தும், கைகளில் கிருமி நாசினி மருந்தால் சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

கோவிலுக்குள் நுழையும் போது அர்ச்சகர்கள், பணியாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்ட பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். வேறு நபர்கள் யாரையும் அனுமதிக்கப்படுவதில்லை. கோவில் செயல் அலுவலர் சோ.செந்தில்குமார் மேற்பார்வையில், கோவிலை தூய்மையாக வைத்து கொள்ள அர்ச்சகர்கள் பூஜைகள் செய்வதற்கு முன்பும், பூஜைகள் செய்த பிறகும் கோவில் உள்பிரகாரம், வெளிபிரகாரம் மற்றும் சன்னதிகள் தூய்மை செய்யப்பட்டு கிருமி நாசினி மருந்தை கோவில் ஊழியர்கள் தெளித்து வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்