மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் தகராறு செய்த 2 சிறுவர்கள்

காவேரிப்பட்டணத்தில் பெண்ணிடம் தகராறு செய்த 2 சிறுவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

காவேரிப்பட்டணம்:

தர்மபுரி மாவட்டம் வெள்ளிசந்தை பகுதியை சேர்ந்தவர் ஜெயசித்ரா (வயது 46). இவர் கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார். மேலும் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த 15-ந் தேதி இவர் ஸ்கூட்டரில் காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது 15 மற்றும் 18 வயதுடைய 2 சிறுவர்கள் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்து ஜெயசித்ராவிடம் தகராறு செய்தனர். அப்போது பொதுமக்கள் அங்கு வரவே 2 சிறுவர்களும் தப்பி சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்