மாவட்ட செய்திகள்

கிணத்துக்கடவு தாலுகாவில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்க டோக்கன் வினியோகம்

கிணத்துக்கடவு தாலுகாவில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்க டோக்கன் வினியோகம்

தினத்தந்தி

கிணத்துக்கடவு

கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.

2-வது கட்டமாக ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அதிகாரி முத்து கூறும்போது, கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள 32ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தினமும் 200 பேருக்கு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு முகக்கவசம் அணிந்து வாங்கிச்செல்ல வேண்டும் என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை