மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் 16-ந் தேதி நடக்கிறது

பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

புதுக்கோட்டை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2019-20-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய 2 பிரிவுகளில் கீழ்க்கண்டுள்ள படி நடைபெற உள்ளது.

இளநிலைப் பிரிவு, மழலை வகுப்பு 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளும், முதுநிலைப் பிரிவு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளிலும் வருகிற 16-ந் தேதி காலை 9 மணி முதல் கேரம் போட்டிகள் நடைபெற உள்ளது.

ஆன்லைனில் பதிவு

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக ஆன்லைனை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் வருகிற 15-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். கேரம் போட்டிகளில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒற்றையர் பிரிவில் 7 மாணவர்களும், 7 மாணவிகளும், இரட்டையர் பிரிவில் 5 மாணவர்கள் அணி மற்றும் 5 மாணவிகள் அணிகளும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து, தாங்கள் எந்த வகுப்பில் பயில்பவர் என்பதற்கான சான்றினை பெற்றுவர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு