மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புத்தாடைகளும், நகைகளும் வாங்குவதற்காக சென்னை தியாகராயநகரில் மக்கள் தற்போதே கூட்டமாக வரத்தொடங்கி உள்ளனர். குறிப்பாக ரெங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று(சனிக்கிழமை) முதல் தீபாவளி பண்டிகை முடியும் வரை தியாகராயநகர் பகுதியில் ரெங்கநாதன் தெரு, பாண்டிபஜார் மற்றும் மாம்பலம் ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போலீசார் தினமும் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்