லால்குடியில் தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன் வாக்கு சேகரித்த போது 
மாவட்ட செய்திகள்

லால்குடி தொகுதியில் தி.மு.க. ஆட்சியில் தான் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன; தி.மு.க.வேட்பாளர் சவுந்தரபாண்டியன் பிரசாரம்

லால்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன் நேற்று லால்குடி பேரூராட்சி பகுதியில் வார்டு, வார்டுகளாக சென்று வாக்கு சேகரித்தார்.

தினத்தந்தி

அப்போது அவர் பேசும்போது, தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் லால்குடி தொகுதியில் விவசாய கல்லூரி, விவசாய பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி பள்ளி, பெண்களுக்கான ஐ.டி.ஐ. உள்ளிட்ட கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. செங்கரையூர் - பூண்டி இடையே கொள்ளிடம் பாலம், சாலைகள் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப் பட்டன. தொடர்ந்து இதுபோல நல்ல திட்டங்களை நிறைவேற்ற உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

அப்போது மத்திய மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் வைரமணி, நகர செயலாளர் துரைமாணிக்கம், ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் புருஷோத்தமன், வி.சி.க. தொகுதி பொறுப்பாளர் மரிய கமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு சந்திரன், தி.மு.க. நிர்வாகிகள் செல்வம், வெற்றிவேல், நகர அவைத்தலைவர் நடராஜன், முன்னாள் நகர செயலாளர்கள் ஆரோக்கியசாமி, பழக்கடை முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி இளவரசன், செல்வகுமார், இளங்கோவன், நகர துணை செயலாளர் குணசேகர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்