மாவட்ட செய்திகள்

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினத்தந்தி

கொலை

செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்றில் கையெழுத்திட்டு விட்டு, வந்த கே.கே.தெரு அ.தி.மு.க. பிரமுகர் மேகராஜ் என்பவரது மகன் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் மற்றும் சிவக்குமார் என்பவரது மகன் மகேஷ்குமார் இருவரையும் கடந்த ஜனவரி மாதம் கொலை செய்த வழக்கில் தினேஷ் மற்றும் மொய்தீன் இருவரும் ஆலப்பாக்கம் இருங்குன்றப்பள்ளி மலைப்பகுதியில் பதுங்கிருப்பதாக கிடைத்த தகவலின்படி செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் அவர்களை பிடிக்க சென்றபோது 2 போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். இதனால் தற்காப்புக்காக தினேஷ் மற்றும் மொய்தீனை போலீசார் சுட்டு பிடிக்க முயன்றபோது இருவரும் குண்டடிப்பட்டு எதிர்பாராத விதமாக உயிரிழந்தனர்.

குண்டர் சட்டத்தில்...

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையதாக ஜெசிகா மற்றும் மாதவன் இருவரையும் செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

இதற்கிடையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின் பேரில் ஜெசிகா, மாதவன் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்