மாவட்ட செய்திகள்

குடிநீர் திருட்டில் ஈடுபட்டால் ரூ. 1 கோடி அபராதம் - அதிகாரி எச்சரிக்கை

குடிநீர் திருட்டில் ஈடுபட்டால் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர்-பரமக்குடி நெடுஞ்சாலையில் சோனை மீனாள் கல்லூரி எதிரே மலர் செடிகள் விற்பனை செய்யும் நர்சரி கார்டன் உள்ளது. இங்கு செடிகள் வளர்ப்பதற்கு காவிரி குடிநீர் இணைப்பில் இருந்து அனுமதியின்றி இணைப்பு எடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கண்காணிப்பு குழுவினர் அந்த இணைப்பை அகற்றினர்.

இதேபோல 10 இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் குழுவினர் அகற்றினர். மேலும் கண்காணிப்பு என்ஜினீயர் ரமேஷ்பாபு, நிர்வாக என்ஜினீயர் அய்யணன், உதவி நிர்வாக என்ஜினீயர் சண்முக நாதன்,உதவி என்ஜினீயர் பாலசுப்பிரமணி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி மாலதி ஆகியோர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது குடிநீர் குழாய்களில் திருட்டுத்தனமாக இணைப்பு ஏற்படுத்துதல், குடிநீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று நிர்வாக என்ஜினீயர் அய்யணன் எச்சரித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு