மாவட்ட செய்திகள்

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

விழுப்புரம்,

உலக போதை பொருள் ஒழிப்பு தினமான நேற்று, விழுப்புரத்தில் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு மற்றும் மாவட்ட காவல்துறை ஆகியன இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானம் அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது. இதில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆயுதப்படை போலீசார், பயிற்சி காவலர்கள், ஊர்காவல் படையினர் ஆகியோர் கலந்துகொண்டு போதை பொருள் ஒழிப்பு குறித்து கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, ஊர்காவல் படை மண்டல தளபதி ஸ்ரீதரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, போதைபொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்