மாவட்ட செய்திகள்

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிப்பு: பெருந்துறையில் அண்ணா சிலைக்கு எம்.எல்.ஏ. மாலை அணிவிப்பு

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

சென்னிமலை,

அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

பெருந்துறையில் உள்ள அண்ணா சிலைக்கு தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ. இனிப்பு வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கே.வி.மணிமேகலை விஸ்வநாதன், பெருந்துறை ஒன்றியக்குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், துணைத்தலைவர் உமா மகேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் விஜயன் (பெருந்துறை), ரவிச்சந்திரன் (ஊத்துக்குளி), சி.எம்.எஸ்.வங்கி துணை தலைவர் டி.டி.ஜெகதீஸ், நிலவள வங்கி தலைவர் கே.ஆர்.சேனாபதி, மாவட்ட கவுன்சிலர்கள் ஏ.வி.பாலகிருஷ்ணன், சக்திவேல், கண்ணம்மாள் ராமசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஹேமலதா சம்பத், பார்வதி ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...