மாவட்ட செய்திகள்

எடியூரப்பாவின் முதல்-மந்திரி கனவு நிறைவேறாது : மந்திரி எச்.டி.ரேவண்ணா பேட்டி

பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தினத்தந்தி

பெங்களூரு,

முதல்-மந்திரி பதவியில் அமர எடியூரப்பா கருடாசயன யாகம் நடத்துகிறார். இந்த யாகம் 8 நாட்கள் நடக்கிறது. இந்த யாகத்தால் கனவு நனவாகும் என்று எடியூரப்பா நம்புகிறார். ஆனால் அவரது முதல்-மந்திரி கனவு நிறைவேறாது. கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும்.

எடியூரப்பா தான் முதல்-மந்திரியாகிவிட வேண்டி கடவுளிடம் செல்கிறார். ஆனால் அது அவருக்கு கைகொடுக்காது. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தான் உள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எக்காரணம் கொண்டும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள்.

முதல்-மந்திரி பதவியில் குமாரசாமி நீடிப்பார். எடியூரப்பா பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று உமேஷ்கட்டி எம்.எல்.ஏ. கூறுகிறார். அது தவறு. குமாரசாமி, மக்களின் நலன் சார்ந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

இவ்வாறு எச்.டி.ரேவண்ணா கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்