மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்துக்கொண்டார்.

திருத்தணியை அடுத்த கொள்ளகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 80). இவர் வெகுநாளாக ஆஸ்துமாவால் அவதிபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி இவர் பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு திருத்தணி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ராமசந்திரன் இறந்துவிட்டார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.