மாவட்ட செய்திகள்

வாகனம் மோதி முதியவர் சாவு

வாலாஜா அருகே வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வாலாஜா

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவாணத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 73). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள புலித்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

படுகாயம் அடைந்த கார்த்திகேயன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது தொடர்பாக வாலாஜா போலீசில் அவரது மகன் கண்ணன் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்