மாவட்ட செய்திகள்

சாலை விபத்தில் மின்வாரிய ஊழியர் சாவு

விக்கிரவாண்டி அருகே சாலை விபத்தில் மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்

தினத்தந்தி

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே குத்தாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 54). இவர் விக்கிரவாண்டி அருகே ஆசூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக (போர்மேன்) பணியாற்றி வந்தார்.

இவர் சம்பவத்தன்று இரவு பணியை முடித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். விக்கிரவாண்டி அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்