மாவட்ட செய்திகள்

மின்வாரிய அமலாக்க அதிகாரிகள் சோதனை: ஆவடி, பொன்னேரியில் 33 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட அமலாக்க அதிகாரிகள் ஆவடி, பொன்னேரி மற்றும் ஐ.டி. காரிடர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 33 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மின்நுகர்வோர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.37 லட்சத்து 38 ஆயிரத்து 231 விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். குற்றவியல் நடவடிக்கையை தவிர்ப்பதற்காக சமரச தொகையாக ரூ.4 லட்சத்து 23 ஆயிரம் செலுத்தினர். எனவே அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. மின் திருட்டு தொடர்பான தகவல்களை அமலாக்க நிர்வாக என்ஜினீயரை 94458 57591 என்ற செல்போனில் தொடர்புக்கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்