மாவட்ட செய்திகள்

கடம்பூர் அருகே நடுரோட்டில் நின்று யானை அட்டகாசம்; நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

கடம்பூர் அருகே நடுரோட்டில் நின்று அட்டகாசம் செய்யும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கடம்பூர் வனச்சரகத்தில் யானை, கரடி, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் விலங்குகளுக்கு உணவு, தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி சாலையில் நடமாடி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் இந்த யானை கடம்பூர் அருகே பிரேக்மேடு என்ற இடத்தில் உள்ள ரோட்டுக்கு வந்தது.

ரோட்டின் நடுவில் யானை நின்று கொண்டதால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. யானையை பார்த்ததும் வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். அதையும் மீறி செல்பவர்களை யானை துரத்தியது. சிறிது நேரத்துக்கு பிறகு யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, இதுபோல் தொடர்ந்து யானை அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. எனவே மாலை நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு