மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் என்ஜினீயர் தற்கொலை

சென்னை பரங்கிமலை மிலிட்டரி என்ஜினீயரிங் சர்வீஸ் பிரிவில் வேலை செய்து வந்த என்ஜினீயர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

பொன்னேரி அருகே புலிக்குளம் ஏரிக்கரை பகுதியில் வசித்து வந்தவர் ராமன் (வயது 40). இவர் சென்னை பரங்கிமலை மிலிட்டரி என்ஜினீயரிங் சர்வீஸ் பிரிவில் வேலை செய்து வந்தார். இவர் சிலரிடம் கடன் வாங்கி உள்ளார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையில் இருந்த இவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்தவர் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்