மாவட்ட செய்திகள்

தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் - விவசாய சங்க மாநில தலைவர்

தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று விவசாய சங்க மாநில தலைவர் சின்னசாமி கூறினார்.

தினத்தந்தி

வாணியம்பாடி,

விவசாயிகள் சங்க மாநில மாநாடு வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்தது. மாநில செயலாளர் தனபால் தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் வாணியம்பாடி, ஆலங்காயம், திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து திரளான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநில தலைவர் சின்னசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜீவாதாரமான தண்ணீரில் முக்கிய பங்கு வகிப்பது பாலாறு. இதன் நீர் 5 மாவட்டங்களில் குடிநீர், விவசாயம் ஆலை பணிக்கு பயன்படுகிறது. ஆனால் தற்போது பாலாற்றில் தண்ணீர் இல்லாமல் பாலைவனம் போல் உள்ளது.

எனவே தென்பெண்ணையுடன் பாலாற்றை இணைக்க கோரினோம். இதுகுறித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கடலில் வீணாக தென்பெண்ணை நீர் கலக்கிறது. இத்திட்டத்தை அரசு செயல்படுத்தி இருந்தால் பாலாற்றில் தண்ணீர் இருந்திருக்கும். தண்ணீர் பஞ்சமும் தீர்ந்து இருக்கும்.

மத்திய அரசு ரூ.648 கோடியில் தென்பெண்ணை - பாலாறு இணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும். இதனை செய்யவில்லை என்றால் அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்