மாவட்ட செய்திகள்

மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கான தேர்வு - 1,526 பேர் எழுதினர்

நெல்லையில் மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கான எழுத்துத்தேர்வு 6 மையங்களில் நேற்று நடந்தது. இதில் 1,526 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

தினத்தந்தி

நெல்லை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. நெல்லையில் கிறிஸ்துராஜா, ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளிகள், ரோஸ்மேரி, ஜோஸ் மெட்ரிக் பள்ளிகள், அரசு என்ஜினீயரிங் கல்லூரி, சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டின் கலைக்கல்லூரி ஆகிய 6 மையங்களில் தேர்வு நடந்தது.

நெல்லை மையங்களில் தேர்வு எழுதுவதற்கு 2 ஆயிரத்து 129 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதில் 1,526 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 603 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு முழுவதும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் சிறப்பு குழு அலுவலர்களும் கண்காணித்தனர்.

இதேபோல் தொழில்துறை உதவி என்ஜினீயர் பதவிக்கான எழுத்து தேர்வு நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை மேக்தலின் மெட்ரிக் பள்ளியில் நேற்று காலையிலும், மாலையிலும் நடந்தது. இதில் 287 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 196 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வை அதிகாரிகள் கண்காணித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து