மாவட்ட செய்திகள்

ஆன்-லைனில் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை: ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ரெயில் டிக்கெட்டுகள் பறிமுதல் 9 பேர் கைது

ஆன்-லைனில் ரெயில்வே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

திருச்சி,

ரெயில்வே டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விற்பனை செய்ய ரெயில்வே நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அனுமதி பெற்றவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிறுவனத்தினர் கடைகளில் இணையதளத்தில் ரெயில்வே டிக்கெட்டுகளை பயணிகளுக்கு முன்பதிவு செய்து கொடுத்து விற்கின்றனர்.

இந்தநிலையில் திருச்சி கோட்ட ரெயில்வேயில் அனுமதி பெற்ற கடைகளில் விதிகளை மீறி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தனிநபர்களின் முகவரியை பயன்படுத்தி ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து அதனை கூடுதல் விலைக்கு விற்று வருவதாகவும், சிலர் உரிய அனுமதி பெறாமலும் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்று வருவதாகவும் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு (ஆர்.பி.எப்.) புகார் வந்தது. அதைத்தொடர்ந்து திருச்சி, பொன்மலை, தஞ்சாவூர், கும்பகோணம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் ரெயில்வே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து விற்கும் கடைகளில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கடந்த 29, 30-ந் தேதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

9 பேர் கைது

இந்த சோதனையின்போது தனி நபர்களின் முகவரிகளை பயன்படுத்தி ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. மொத்தம் 9 கடைகளில் இந்த முறைகேடு கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ரெயில்வே டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு 9 பேரையும் கைது செய்தனர். அதேபோல கடைகளில் பயன்படுத்தப்பட்ட கணினிகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்