மாவட்ட செய்திகள்

விவசாயி சாவு

பஸ்சின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.

ஆத்தூர்:-

தலைவாசல் அருகே உள்ள பெரியேரி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 49). விவசாயி. நாகப்பட்டினம் மாவட்டம் கங்களாஞ்சேரி புதுநகரை சேர்ந்தவர் சத்தியநாதன் (47). 2 பேரும் நண்பர்கள். இவர்கள் நேற்று ஆத்தூர் வந்துவிட்டு பெரியேரிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் ஊராட்சி காந்திபுரம் பகுதியில் தனியார் பஸ்சின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மணி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த சத்தியநாதன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்