மாவட்ட செய்திகள்

கலெக்டர் தலைமையில் விவசாயிகள் நலக்கூட்டம்

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நேற்று நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மைத்துறை சார்பில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நேற்று நடைபெற்றது.

அப்போது நிகழ்ச்சியில், உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் மீனவ குடும்ப விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் பயறு வகைகள் திட்டத்தின் கீழ், பின்னேற்பு மானிய விலையில் ரோட்டோ வீட்டர் கருவியை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துச்சாமி, வேளாண்மை இணை இயக்குநர் சம்பத், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசர் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு