மாவட்ட செய்திகள்

கிறிஸ்தவ தேவாலயங்கள் சீரமைப்பிற்கு நிதி உதவி - கலெக்டர் தகவல்

கிறிஸ்தவ தேவாலயங்கள் சீரமைப்பிற்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பணிக்காக சிறுபான்மையினர் நலத்துறைக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தில் நிதி உதவி பெற விரும்பும் கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டி லிருந்து எந்தவித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும். விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் இணைத்து மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டரால் நியமிக்கப்பட்ட குழுவினர் தேவாலயங்களை ஸ்தல ஆய்வு செய்து, கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு குறித்து அறிக்கை தாக்கல் செய்வர்.

அவற்றில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து முன்மொழிவுடன் சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கு கலெக்டரால் பரிந்துரை செய்யப்படும். பின்பு நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்