மாவட்ட செய்திகள்

வன ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி

சுருளி அருவி பகுதியில் வன ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

கம்பம்:

கம்பம் அருகேயுள்ள சுருளி அருவி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கு அரிய வகை உயிரினங்களும், காட்டு மரங்களும், சந்தனம், தேக்கு, தோதகத்தி உள்ளிட்ட மரங்களும் உள்ளன. யானை, புலி, மான், கரடி அதிகளவில் கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன.

இந்நிலையில் தற்போது கடும் வெயிலால் வனப்பகுதியில் தீப்பிடித்து வருகிறது. இதனை தடுக்கும்பொருட்டு வனப்பகுதியில் தீத்தடுப்பு குறித்து வனத்துறை பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க மாவட்ட வனத்துறை சார்பில், அனைத்து வனச்சரகர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி சுருளி அருவி பகுதியில் கம்பம் கிழக்கு வனச்சரகர் அருண்குமார் தலைமையில் வன ஊழியர்களுக்கு, தீ தடுப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இதில் தீ அணைப்பது, தீத்தடுப்பு காவலர்கள் செய்ய வேண்டிய பணிகள், முதலுதவி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து