மாவட்ட செய்திகள்

சேலத்தில் 2-வது நாளாக காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.

தினத்தந்தி

சேலம்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து பங்கேற்று தேர்வான 2,762 பேருக்கு உடற்தகுதி தேர்வு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். முதல் நாளில் கல்வி சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் மற்றும் மார்பளவு அளவீடு செய்தல், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

நேற்று 2-வது நாளாக காவலர் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்க 700 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு உயரம், மார்பளவு போன்றவை அளவீடு செய்யப்பட்டது. பின்னர் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில், கலந்து கொண்ட இளைஞர்கள், இலக்கை நோக்கி வேகமாக ஓடினர். முடிவில், தகுதியுள்ளவர்கள் மட்டும் அடுத்த தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேசமயம், தகுதியில்லாத இளைஞர்கள் தகுதியிழப்பு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2-வது நாளாக நடந்த காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வுகளை போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு கண்காணித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து