மாவட்ட செய்திகள்

தமிழகத்துக்கு முதன் முறையாக ஒரே நாளில் 19 லட்சத்து 22 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 3 கோடியே 31 லட்சத்து 42 ஆயிரத்து 480 தடுப்பூசிகள் வந்து உள்ளன.

இந்த நிலையில் நேற்று மதியம் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 75 பெட்டிகளில் 9 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், மாலையில் புனேவில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் 86 பெட்டிகளில் 10 லட்சத்து 22 ஆயிரத்து 80 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வந்தன.

தமிழகத்துக்கு முதன் முறையாக ஒரே நாளில் வந்த 19 லட்சத்து 22 ஆயிரத்து 80 தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்