மாவட்ட செய்திகள்

கட்டுமான அதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பா.ஜனதா முன்னாள் கவுன்சிலர் கைது

தானே காசர்வடவலி பகுதியில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் அங்கு புதிதாக கட்டிடம் ஒன்று கட்டி வருகிறார்.

தானே,

கட்டுமான நிறுவன அதிபரை முன்னாள் கவுன்சிலர் சுதிர் பாட்கே என்பவர் சந்தித்து சட்டவிரோதமாக கட்டிடம் கட்டி வருவதாக தெரிவித்தார். இது குறித்து மாநகராட்சியிடம் புகார் அளிக்காமல் இருக்க தனக்கு ரூ.50 லட்சம் தர வேண்டும் என மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்து போன கட்டுமான அதிபர் அவரிடம் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் தருவதாக கூறினார். பணத்தை பெற்ற சுதிர் பாட்கே மீதி ரூ.45 லட்சத்தை கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தார்.

SCROLL FOR NEXT