மாவட்ட செய்திகள்

அமைச்சர் ஆதரவாளர் கொலையில் மேலும் 4 வாலிபர்கள் கைது

அமைச்சர் ஆதரவாளர் கொலையில் தலைமறைவாக இருந்த மேலும் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

பாகூர்,

கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது 36). அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளரான இவர் கடந்த 31-ந்தேதி கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி அருகே நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாம்பசிவத்தின் மாமா வீரப்பன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சாம்பசிவம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

4 பேர் கைது

இந்த கொலை தொடர்பாக கிருமாம்பாக்கத்தை சேர்ந்த அமுதன், கூடப்பாக்கம் அன்பு உள்பட 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதில் அமுதன், அன்பு, பாக்கியராஜ் ஆகியோரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய கூடப்பாக்கம் மணிபாலன் (22), சார்லஸ் (21), கவியரசு (21), வழுதாவூர் ஜெகன் (21) ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

கூலிப்படை

இவர்கள் அபிஷேகப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து, கைது செய்தனர். இவர்கள் கூலிப்படையாக செயல்பட்டு சாம்பசிவத்தை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு