மாவட்ட செய்திகள்

தலையை துண்டித்து வாலிபர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள எருமையூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 23). கடந்த செவ்வாய்க்கிழமை தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

தினத்தந்தி

கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. வெற்றிவேல் கொலை வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மேலும் 4 பேரை சோமங்கலம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த சுரேந்தர் (வயது 23), ஹரிஹரன் (20), ஹேம்நாத் (23), பிரசாந்த் (23) என்பது தெரியவந்தது. அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்