மாவட்ட செய்திகள்

இன்றும், நாளையும் நடக்கிறது கூடங்குளம் அணுஉலையில் இருந்து நீராவி வெளியேற்றும் பணி வளாக இயக்குனர் தகவல்

கூடங்குளம் அணுஉலையில் இருந்து நீராவி வெளியேற்றும் பணி இன்றும், நாளையும் நடைபெற உள்ளது என்று வளாக இயக்குனர் டி.எஸ்.சவுத்ரி தெரிவித்து உள்ளார்.

வள்ளியூர்,

கூடங்குளம் அணுஉலையில் இருந்து நீராவி வெளியேற்றும் பணி இன்றும், நாளையும் நடைபெற உள்ளது என்று வளாக இயக்குனர் டி.எஸ்.சவுத்ரி தெரிவித்து உள்ளார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில ரஷிய நாட்டு உதவியுடன் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் அணுஉலையில் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்தும், 2வது அணுஉலையில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்தும் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. அணுஉலைகளில் அவ்வப்போது மின்உற்பத்தி நிறத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 2வது அணுஉலையில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக கடந்த பிப்ரவரி மாதம் 19ந் தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. ரஷியா மற்றும் இந்திய விஞ்ஞானிகள் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணியை மேற்கோண்டு தற்போது பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இன்னும் சில நாட்களில் 2வது அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் டி.எஸ்.சவுத்திரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணுஉலையில் பாரமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிகள் தற்போது முடிவடைந்து உள்ளது. இந்த நிலையில் அணுஉலையில் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதன்படி இன்றும், நாளையும் அணுஉலையில் இருந்து நீராவி வெளியேற்றும் பணிகள் நடக்கவுள்ளது. பகல் நேரங்களில் சில நிமிடங்கள் மட்டும் நடைபெறும் இந்த சோதனையின்போது அணுஉலையில் இருந்து நீராவி வெளியேறும். அப்போது பயங்கர சத்தத்துடன் அதிகமாக வெண்புகை வெளியேறும். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தற்போது முதலாவது அணுஉலையில் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை முதலாவது அணுஉலையில் இருந்து 20 ஆயிரத்து 156 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. 2 அணுஉலைகள் மூலமும் இதுவரை 26 ஆயிரத்து 776 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்