மாவட்ட செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான அரசு விடுதிகள்; செங்கல்பட்டு கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

தினத்தந்தி

செங்கல்பட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளுக்காக 16 விடுதிகள், 9 பள்ளி மாணவி விடுதிகள், 1 கல்லூரி மாணவ விடுதி மற்றும் 1 பழங்குடியினர் மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதியில் பட்டபடிப்பு பயிலும் மாணவர்களும் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் உணவு மற்றும் தங்குமிடம் அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும்.

விடுதிகளில் சேருவதற்கான தகுதியானது, பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் நிலையத்திற்கு தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூரம் மாணவிகளுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் இலவசமாக பெற்று பூர்த்தி செய்து. இந்த மாதம் 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த சலுகைகளை பெற்று பயனடையுமாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்