மாவட்ட செய்திகள்

போக்சோவில் மளிகை கடைக்காரர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேனி அல்லிநகரத்தை சேர்ந்த மளிகை கடைக்காரரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

தேனி:

தேனி அல்லிநகரம் அண்ணாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). இவர் அல்லிநகரத்தில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் சம்பவத்தன்று 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த மற்றொரு சிறுமி, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு சென்ற போது பாண்டியன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்