மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியர்கள் கூட்டம்: மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் முதன்மை கல்வி அலுவலர் கணே‌‌ஷ் பேச்சு

மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என பாளையங்கோட்டையில் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் கணே‌‌ஷ் கூறினார்.

தினத்தந்தி

நெல்லை,

மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என பாளையங்கோட்டையில் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் கூறினார்.

தலைமை ஆசிரியர்கள் கூட்டம்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட அலுவலர்கள் சுடலை, சீனிவாசன், சவுந்திர சேகரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேர்முக உதவியாளர் நாராயணன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் பேசியதாவது:-

மாணவர் சேர்க்கை

பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை உடனடியாக தேர்வு எழுத வைக்க வேண்டும். அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பள்ளிக்கூடங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

புதிய பாடத்திட்டத்தை அனைத்து மாணவர்களுக்கும் சிரமம் இல்லாமல் கற்று கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களை தயார் செய்ய வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, வள்ளியூர், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய 5 கல்வி மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மாலையில் மெட்ரிக்குலேசன் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு