மாவட்ட செய்திகள்

போளூரில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போளூர் தாலுகா அலுவலகம் முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

போளூர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த களம்பூர் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வியாபாரிகள், சுமைதூக்கும் கூலித்தொழிலாளர்களின் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஏற்படுத்திட சங்கங்களை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று போளூர் தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் பழனி, சி.ஐ.டி.யு. தலைவர் ராமு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பொதுச்செயலாளர் சின்னசாமி, மாவட்ட தலைவர் முத்தையன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். பின்னர் கோரிக்கை மனுவை தாசில்தார் சண்முகத்திடம் வழங்கினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு