மாவட்ட செய்திகள்

இந்துத்வா கொள்கை: பா.ஜனதாவிடம் சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை சஞ்சய் ராவத் காட்டம்

இந்துத்வா கொள்கையில் பா.ஜனதாவிடம் இருந்து சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை என்று சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை,

சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே நினைவுநாளையொட்டி நேற்று மும்பை தாதர் சிவாஜிபார்க்கில் உள்ள அவரது சமாதியில் சிவசேனா மற்றும் கூட்டணி கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், எம்.பி. யுமான சஞ்சய் ராவத்தும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரிடம், இந்துத்வா கொள்கையில் இருந்து சிவசேனா விலகி செல்வதாக பா.ஜனதாவினர் அடிக்கடி கூறி வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

தீவிர இந்துத்வா

சிவசேனா தீவிர இந்துத்வா கொள்கை கொண்ட கட்சி. இன்றைக்கும் அப்படி தான். நாளைக்கும் அப்படித் தான் செயல்படுவோம். இந்துத்வா கொள்கை பிரச்சினையில் நாங்கள் வேறு எந்த கட்சியிடமும் இருந்தும் சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை. நாட்டுக்கு தேவைப்படும் போதெல்லாம், சிவசேனா இந்துத்வா வாளை ஏந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனா மதசார்பற்ற கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு