மாவட்ட செய்திகள்

எச்.ராஜாவை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 89 பேர் கைது

எச்.ராஜாவை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய சாலை மறியலில் 89 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி,

தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தேனி, உத்தமபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 89 பேரை போலீசார் கைது செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை பற்றி பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா அவதூறாக பேசியதாகவும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேனி மாவட்டத்தில் தேனி, உத்தமபாளையம் ஆகிய 2 இடங்களில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

தேனியில் நேரு சிலை சிக்னல் பகுதியில் சாலை மறியல் நடந்தது. இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் அக்கட்சியினர் மதுரை சாலையில் இருந்து நேரு சிலைக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு மறியலில் ஈடுபட்டனர். இதில் தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொல்.திருமாவளவனை அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும். எச்.ராஜாவை கைது செய்வதற்கு தமிழக அரசும், போலீஸ் துறையும் பயப்படக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல், உத்தமபாளையம் புறவழிச்சாலை பஸ் நிறுத்தம் அருகில் மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 29 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். 2 இடங்களிலும் மொத்தம் 89 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு