மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தற்கொலை

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தற்கொலை செய்துக் கொண்டார்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பராசக்தி நகரில் வசித்து வந்தவர் பார்த்திபன் (வயது 50). இவரது மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதன் காரணமாக பார்த்திபன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பார்த்திபன் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாலங்காடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து