மாவட்ட செய்திகள்

கொலை வழக்கில் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை - திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு

கொலை வழக்கில் 2 வாலிபர்களுக்கு ஆயுள்தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

தண்டராம்பட்டை அடுத்த மலமஞ்சனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (வயது 50). இவரது அண்ணன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி நடைபெற்றது. அதே கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர்கள் கண்ணுசாமி மகன் பாலாஜி(30), குப்புசாமி மகன் சவுந்தரராஜன்(30) ஆகியோர் மது போதையில் ஆடிக்கொண்டு வந்து உள்ளனர்.

அப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், மழை வந்து விடும் என்றும், வேகமாக செல்லுங்கள் என்றும் காந்தி அவர்களை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அன்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அதில் ஆத்திரமடைந்த பாலாஜியும், சவுந்தரராஜனும் காந்தியை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

இது குறித்து காந்தியின் மகன் சுந்தர் கொடுத்த புகாரின்பேரில் தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி மற்றும் சவுந்தரராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி திருமகள் தீர்ப்பு கூறினார்.

அதில் அவர், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாலாஜி மற்றும் சவுந்தரராஜனுக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். அபராதத் தொகை கட்டத் தவறினால் மேலும் கூடுதலாக 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பின்னர் அவர்களை போலீசார் பலத்த காவலில் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்